
- அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு
பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார். இதன் மூலம், ரஷ்யாவை
உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
ஒன்றியம் இணைந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
- ட்ரம்ப்
இந்தியா விரைவில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை “மிகக் குறைக்கும்” என
தெரிவித்துள்ளார். இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் 5% உயர்ந்துள்ளன.
- வடகொரியா
‘APEC’ உச்சி மாநாட்டை முன்னிட்டு பலக் குறுகிய தூர ஏவுகணைகளை
ஏவியுள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியா, அமெரிக்கா,
ஜப்பான் ஆகியவை இணைந்து பாதுகாப்பு கண்காணிப்பை
அதிகரித்துள்ளன.
- மியான்மரில்
சட்டவிரோத இணைய புள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட 2,500 க்கும்
மேற்பட்ட ஸ்டார்லிங்க் சாதனங்களை SpaceX நிறுவனம்
முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரான்ஸ்
அரசு, பறவைக் காய்ச்சல் பரவலின் காரணமாக நாடு முழுவதும்
அதிரடி எச்சரிக்கையை அறிவித்துள்ளது. பல பண்ணைகளிலும் இயற்கை காடுகளிலும்
நோய் அதிகரித்துள்ளது.
- பாகிஸ்தான்
10 நாள் இடைநிறுத்தத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் ஊடான
சர்வதேச வர்த்தக பாதையை மீண்டும் தொடங்கியுள்ளது.
- கனடா,
2025ஆம் ஆண்டில் சர்வதேச மாணவர் வருகைகள் 60% குறைந்துள்ளதாக
அறிவித்துள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை
எதிர்கொள்கின்றன.
- அமெரிக்காவில்
இந்திய வம்சாவளி பாரம் வாகன ஓட்டுநர் ஜஸன்ப்ரீத் சிங், மரண
விபத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்; அவரின்
குடியுரிமை ஆவணங்கள் விசாரணையில் உள்ளன.
- ட்ரம்ப்,
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை ‘வலிமையான தலைவர்’ எனக்
குறிப்பிட்டதற்காக எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.